Ennai Nesikindraya
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)
1.வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பினதால்
ஓடிவந்தேன் மானிடனாய்-(2)
2.பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கிறேன் பார்-(2)
பரிகாரச் சின்னமாம் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்-(2)
3.பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன்
பாதம் தன்னில் இளைபாறவா-(2)
4. உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரி காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ?